அக்காவைத் தொடர்ந்து ரஜினியின் இளைய மகளும் காவல் நிலையத்தில் திடீர் புகார்!
இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷின் மனைவியான மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரும் ஐஸ்வர்யாவின் வீட்டிலிருந்து திட்டமிட்டு நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது சொகுசு காரின் சாவி தொலைந்து போய்விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது கணவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில் , கடந்த 2019 ல் விசாகன் வணங்கா முடியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வேத் , வீர் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!