இன்று முதல் தென்மாவட்ட ரயில்கள் வழக்கம் போல இயங்கும் | பராமரிப்பு பணி நிறைவு

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் செய்து வந்த பராமரிப்பு பணிகள் காரணமாக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் இன்று முதல் ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்

அதன்படி செங்கோட்டையில் இருந்து வருகிற டிசம்பர் 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16848), குருவாயூரிலிருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 27, 30 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரியில் இருந்து 28ம் தேதி கொல்கத்தா புறப்பட வேண்டிய ஹவுரா எக்ஸ்பிரஸ் (வ.எண்.12666), நாகர்கோவிலில் இருந்து 31ம் தேதி மும்பை புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் (வ.எண்.16340), நாகர்கோவிலில் இருந்து 28ம் தேதி கச்சிகுடா புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் (வ.எண்.16354), பனாரசிலிருந்து 29ம் தேதி புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16368), நாகர்கோவில் மற்றும் கோவையில் இருந்து 28, 31ம் தேதிகளில் புறப்பட வேண்டிய பகல் நேர ரெயில் (வ.எண்.16321/வ.எண்.16322) ஆகிய ரெயில்கள் வழக்கமான பாதையில் இயக்கப்படும்.

ரயில் ரயில்வே நெல்லை திருநெல்வேலி தூத்துக்குடி

அதே போல, சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22671/வ.எண்.22672) 28, 31ம் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் திருச்சி வரை இயக்கப்படுவதற்கு பதிலாக மதுரை வரை இயக்கப்படும். 27, 30-ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.16845), மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து 28, 31-ம் தேதிகளில் இயக்கப்படும் ரெயில் (வ.எண்.16846) ஆகிய ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்படும்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web