பெண்களுக்கான சிறப்பு சலுகை.. சுய லாபத்திற்கு பயன்படுத்த கூடாது.. எச்சரித்த நீதிமன்றம்!

புகார் அளித்த டெல்லியைச் சேர்ந்த பெண் ஜூலை 14-ம் தேதி தனது காதலனுடன் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது, தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலனை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அந்த பெண்ணுடன் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதை பெண் நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டார்.
நீதிபதிகள், “அரசியலமைப்புச் சட்டத்தின்படி நம் நாட்டு ஆண்களுக்கு சம உரிமையும், பாதுகாப்பும் உள்ளது. இருப்பினும், பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பெண்களின் பாதுகாப்பிற்கான இந்த சிறப்பு சலுகைகளை தனிப்பட்ட லாபத்திற்காகவோ அல்லது பங்கீடு செய்யவோ பயன்படுத்தக்கூடாது. இது போன்ற முறைகேடுகள் சமூகத்தில் அதிகமாக உள்ளது” என்று நீதிமன்றம் கூறியது.மேலும், இன்று பல காரணங்களுக்காக கற்பழிப்பு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. தவறான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் நற்பெயரையும் அழிக்கின்றன. பலாத்காரம் என்பது மிகவும் கொடூரமான மற்றும் வேதனையான குற்றம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!