நாளை தூத்துக்குடி வரை பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு!

 
பொங்கல்
 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு - துாத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

வண்டி எண். 06569 SMVB பெங்களூர்- தூத்துக்குடி ரயில்: பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து நாளை ஜனவரி 10ம் தேதி 10 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரயிலட் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.

ரயில்

வண்டி எண். 06570 தூத்துக்குடி- மைசூர் ரயில்: தூத்துக்குடியில் இருந்து 11ம் தேதி சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 6-30 மணிக்கு மைசூர் சென்றடையும். 

கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர், மாண்டியா, எளியூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். 

ரயில்

வண்டி எண். 06569 பெங்களூர்- தூத்துக்குடி ரயிலுக்கான முன்பதிவு துவங்கி விட்டது. வண்டி எண். 06570 தூத்துக்குடி-மைசூர் ரயிலுக்கான முன்பதிவு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. நாளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சிறப்பு ரயிலை இயக்கியமைக்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web