நாளை முதல் சிறப்பு ரயில்கள்... தென்மாவட்ட பயணிகளே குறிச்சிக்கோங்க!
![ஊட்டி மலை ரயில் ரத்து!!](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/migrated/9d7ee50fbdda42eecbd0e5542c9a1256.jpg)
தமிழகத்தில் தெற்கு ரயில்வே கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து பணிபுரியும் இடத்துக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க உத்தேசித்துள்ளது.அதன்படி தாம்பரம் மற்றும் மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஜூன் 6, 9,14,16,21,23,28,30 தேதிகளில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1:55 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூருவை சென்றடையும்.
இதேபோன்று மறு மார்க்கத்தில் மங்களூரில் இருந்து ஜூன் 8,10,15,17,22,24,29 மற்றும் ஜூலை 1 தேதிகளில் சனி மற்றும் திங்கட்கிழமைகளில் பிற்பகல் 12 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!