இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்... சொந்த ஊர் திரும்புபவர்கள் நோட் பண்ணிக்கோங்க!

 
ரயில் முன்பதிவு

இன்று முதல் இந்த மாத கடைசி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் இயங்கும் தேதியைக் குறித்துக் கொண்டு உடனே முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை எளிதாக்குங்க. தமிழகத்தில் தெற்கு ரயில்வே கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து பணிபுரியும் இடத்துக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க உத்தேசித்துள்ளது.அதன்படி தாம்பரம் மற்றும் மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.

ரயில்

இந்நிலையில், இன்று முதல் ஜூன் 6, 9,14,16,21,23,28,30  ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1:55 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:55 மணிக்கு மங்களூருவை சென்றடையும்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..
இதேபோன்று மறு மார்க்கத்தில் மங்களூரில் இருந்து ஜூன் 8,10,15,17,22,24,29 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் சனி மற்றும் திங்கட்கிழமைகளில் பிற்பகல் 12 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:45 மணிக்கு தாம்பரத்தை வந்தடைடையும். கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web