தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்!
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது அவர்கள் இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தயுள்ளனர்.

3 பைபர் படகுகளில் சென்ற 12 மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 மீனவர்கள் படுகாயம், மீதமுள்ள மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மீனவர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
