பகீர்... வகுப்பறையில் ஆசிரியர் குத்தி கொலை ... மாணவன் வெறிச்செயல்!

 
ராஜேஷ்

 அஸ்ஸாம் மாநிலத்தில்  சிவசாகர் மாவட்டத்தில்  பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ் பருவா பெஜவாடா. அவர் வகுப்பறையில்  பாடம் நடத்திக்கொண்டிருந்த போது ஒரு மாணவன் கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதனை கவனித்த ராஜேஷ் அந்த மாணவனை கண்டித்தார். வகுப்பை கவனிக்கும்படி கூறினார்.

மாணவன் கேட்காததால் தண்டணையாக வகுப்பறைக்கு வெளியே நிறுத்தினார்.  இதனால் அந்த மாணவன் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.ஆத்திரமடைந்த அந்த மாணவன் கடைக்கு சென்று கத்தி வாங்கி வந்தான். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது தன்னிடம் இருந்த கத்தியால் ஆசிரியரை குத்தி கொலை செய்துவிட்டார். இதனைக் கண்டு அங்கிருந்து சக மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

ராஜேஷ்


 

இதைப் பார்த்து அச்சமடைந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவனை கைது செய்துள்ளனர். பள்ளியில் வகுப்பறையிலேயே ஆசிரியரை மாணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web