அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்தார் ஸ்டாலின்!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம் உட்பட பல இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. பாஜகவின் பழிவாங்கும் நோக்கம் என பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.
Sensational scenes as DMK minister Senthil Balaji is taken into custody on corruption charges by ED & suddenly cries of chest pain.
— Cogito (@cogitoiam) June 14, 2023
This is no ordinary arrest, he is the 2nd most powerful man in the state & money bank of the ruling party.
Annamalai promised that corrupt lobbies… pic.twitter.com/pMeQtYN9sa
இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அவரது உடல்நலம் குறித்தும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது அரசு பணி வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சோதனைகளின் முடிவில் அமலாக்கத்துறையினர், இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் துடிதுடித்தப்படியே கதறியழுதார். பயங்கர நெஞ்சுவலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி கதறியழுத நிலையில், அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்