கோவிலில் 4 சவரன் திருட்டு.!! சிசிடிவி காட்சிகளால் சிக்கிய கொள்ளையன் !!

 
அங்காள பரமேஸ்வரி அம்மன்

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் பிரபலமான இந்த கோவிலில் ஏராளமானோர் வழிபட்டு வந்துள்ளனர். இந்த ஆலயத்தின் பூசாரி கடந்த 3ஆம் தேதி காலையில் வழக்கம் போல பூஜைகளை செய்து விட்டு சாப்பிட சென்றுள்ளார்.

மீண்டும் கோவிலுக்கு வந்துபார்த்தபோது, அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலி சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அங்காள பரமேஸ்வரி அம்மன்

அப்போது மர்ம நபர் ஒருவர் கோவிலில் வந்து சாமி கும்பிடுவதுபோல் நுழைந்துள்ளார். பின்னர் சிறிதுநேரம் நோட்டமிட்டு யாருமில்லாத நேரத்தில் கருவறைக்குள் சென்று அம்மன் சிலை கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை திருடி செல்கிறார். இந்த காட்சிகளின் அடிப்படையில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மன் சிலை கழுத்தில் இருந்து தங்க தாலியை திருடி சென்ற நபரை கைது செய்தனர்.

அங்காள பரமேஸ்வரி அம்மன்

விசாரணையில் அவர் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web