எல்லாத்தையும் நிறுத்துங்கப்பா...” ஐ.நா. அதிர்ச்சி தகவல் | காசாவில் வெடிக்காத குண்டுகளை அகற்றவே 14 வருடங்கள் ஆகுமாம்!

 
காசா
 

எல்லாத்தையும் நிறுத்துங்கப்பா என்று ஐநா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தற்போது காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற பெரிய அண்ணன் அமெரிக்காவே போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் இந்த போரில் 34,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். போரின் காரணமாக காஸாவுக்குள் நிவாரணப் பொருட்கள் எதுவும் வரவில்லை. உணவின்றி நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர். தொற்று நோய்களும் தீவிரமடைந்துள்ளன

ஐநா

தற்போதைய நிலவரப்படி, காசா மீது இஸ்ரேல் வீசிய பல குண்டுகள் இன்னும் வெடிக்காமல் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. இந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்க 14 ஆண்டுகள் ஆகலாம் என ஐ.நா திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவையின் (UNMAS) மூத்த அதிகாரி Behr Lothamer இந்தத் தகவலை வெளியிட்டார். இஸ்ரேலின் போரினால் காசாவில் 37 டன் குப்பைகள் எஞ்சியுள்ளதாக அவர் கூறினார்.

இஸ்ரேல் காஸா

இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், “சுமார் 7 மாதங்களாக நடந்து வரும் போரில் ஏராளமான கட்டிடங்கள் வெடிகுண்டு வீசி அழிந்துள்ளன. சில வெடிகுண்டுகள் வெடிக்காமல் உள்ளன. எத்தனை குண்டுகள் என்று சரியாகச் சொல்ல முடியாது. வெடிக்காத ஒவ்வொரு போரிலும், 10% வெடிகுண்டுகள் வெடிக்காமல் இருக்க, 7, 100 டிரக்குகளுடன் வேலை செய்யத் தொடங்கினாலும், 50,000 நாட்கள் ஆகும் இந்த வெடிகுண்டுகளை அகற்ற,'' என்றார். இதனால் இன்னும் எத்தனை உயிர் பலியாக போகிறது என தெரியவில்லை.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web