தீவிரமடையும் ரெமல் புயல்... நாகை, தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கியுள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரேமல் புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தென்படுவதாகவும், ரெமல் புயல் தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இம்மாதம் 26ம் தேதி ரெமல் புயல் வங்கதேச கடற்கரையோரம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், வங்கக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மீனவர்களை எச்சரிக்கும் வகையில் நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
