அதிர்ச்சி... பள்ளியில் காலை உணவு சாப்பிட்டு மாணவர்கள் 23 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒரு மாணவர் பலி!

 
புளியோதரை

புளியோதரை சாப்பிட்டு பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி சமூக நலக் குடியிருப்புப் பள்ளியில் விஷம் கலந்த உணவை உட்கொண்ட மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

புளியோதரை

கடந்த 12ம் தேதி சமூக நலக் குடியிருப்புப் பள்ளியில் காலை உணவாகப் புளியோதரை சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. புவனகிரி பகுதி மருத்துவமனையில் உடனடியாக மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாந்த் எனும் மாணவர் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

புளியோதரை

 

உயிரிழந்த மாணவர் போச்சம்பள்ளி மண்டலத்தின் ஜிப் லக் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், புவனகிரி சமூக நலக் குடியிருப்புப் பள்ளியின் முதல்வர் மீது ஐபிசி பிரிவு 153 ஏ, 295 ஏ ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

 

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web