பள்ளி முடிந்து சைக்கிளில் திரும்பிய மாணவன் கால்வாயில் விழுந்து மரணம்!

 
சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த மாணவன், சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்
கரூர் மாவட்டம் பள்ளபட்டியில், பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த மாணவன், சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம் பள்ளபட்டி ஹபீப் நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி. இவர் மகன் முகமது உஸ்மான் (12). பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த முகமது உஸ்மான் நேற்று மாலை பள்ளி முடிந்து தனது சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், திண்டுக்கல் சாலையில் தனியார் வங்கி எதிரில் உள்ள சாக்கடை கால்வாயில் சைக்கிளுடன் முகமது உஸ்மான் தவறி விழுந்தார். இதனை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிச் சென்று சிறுவனை கால்வாயில் இருந்து மீட்க முயற்சி செய்துள்ளனர். மழை பெய்து மழை நீர் சாக்கடை கால்வாயில் வேகமாக சென்றதால் மழைநீர் சிறுவனை இழுத்து சென்றது. 

சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த மாணவன், சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்

அதன் பின்னர் பொதுமக்கள் சிறுவனை தேடும் பணிகளை மேற்கொண்ட நிலையில் உடனடியாக இது குறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

சுமார் அரை கி.மீட்டர் தூரம் உள்ள பள்ளபட்டி அரசு மருத்துவமனை முனை அருகேயுள்ள நங்காஞ்சி ஆற்றில் சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டனர். உடனடியாக சிறுவனை பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் முன்பே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!