கார் மோதியதில் பைக்கில் சென்ற மாணவர் பலி!
சென்னை திருமங்கலத்தில் கார் மோதியதில் பைக்கில் அமர்ந்து சென்ற மாணவர் உயிரிழந்தார். பைக்கில் அமர்ந்திருந்த மாணவன் நித்தின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைக்கை. ஓட்டிய அபிஷேக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி மாணவன் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அயனாவரத்தில் வசித்து வருபவர் 20 வயது அபிஷேக்.

இவரது நண்பர் 19 வயது நித்தின் சாய். பைக்கில் சென்றபோது கார் மோதியது. முன்விரோதம் காரணமாக மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
