மாணவர்கள் குஷி... இன்று காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது...முழு விபரம்

 
பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்
தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாணவர்கள் குஷியில் உள்ளனர். கடந்த மார்ச் 22ம் தேதி 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இன்று முதல் கலை, அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் படிப்புகளுக்கும் விண்ணப்பங்களும் வழங்கப்படும் நிலையில், தேர்வு முடிவுகளை மாணவர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

 தேர்வு

10, 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் அனைத்தும் தொடங்கி நிறைவடைந்துள்ளன. அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. 

மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விபரங்களுடன் கணினி வழியில் மதிப்பெண் இணைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ள நி லையில், ஏற்கனவே அறிவித்தபடி, மே 6 மற்றும் மே 10ம் தேதிகளில் 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.  இந்நிலையில், இன்று காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 

தேர்வு

மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இணையதளங்களிலும் உடனுக்குடன் மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொண்டு, தங்களது மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web