பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் சடலமாக மீட்பு!

 
முகிலன் மாணவன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், கொத்தூர் பகுதியில் வசித்து வருபவர்  முகிலன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுதியில் தங்கி படித்து  வந்த முகிலன், வகுப்பு வரவில்லை என பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  அதிர்ச்சி அடைந்த பெற்றோர், காவல் துறையை நாடியுள்ளனர். இந்நிலையில் தான் பள்ளி வளாகத்தில் இருந்த கிணற்றில் முகிலன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

முகிலன் மாணவன்

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்ட உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். முகிலனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவர்கள், உடம்பில் ரத்த காயங்கள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !
பள்ளி நிர்வாகத்திற்கு காவல் துறை துணைபோவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் மரணத்திற்கு நீதிகேட்டு, அதிமுக, தவெக, இந்து முன்னணி அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியபிறகு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாணவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே இது கொலையா தற்கொலையா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?