தடுமாறுது தலைமுறை... கல்லூரி விழாவில் மாணவர்களுக்குள் மோதல்.. மாணவன் குத்திக்கொலை!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறத. இந்த கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆண்டுவிழா நடைபெற்றது.
அப்போது மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி என உற்சாகமாக நடைபெற்றது. ஆண்டு விழாவையொட்டி மாணவர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென இரு தரப்பு மாணவர்கள் இடையே கல்லூரி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். மாணவர்கள் அனைவரும் கையில் கம்பு, கற்கள் வைத்துக்கொண்டு மோதியதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலின் போது சக மாணவர்கள் கத்தியால் குத்தியதில் 4ஆம் ஆண்டு படிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் பாஸ்கர் (22) படுகாயமடைந்தார்.
பின்னர் மாணவர் பாஸ்கர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விழாவில் மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!