ஜூலை 14ம் தேதி டிராகன் விண்கலத்தில் பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா குழு!
இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 பயணக் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 14 அன்று பூமிக்கு திரும்ப இருப்பதாக அறிவித்துள்ளனர். “ஆக்சியம்-4 பயணத்தை கவனமாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய இலக்கு, ஜூலை 14 ம் தேதி விண்கலம் பிரிந்து பயணத்தைத் தொடங்குவது,” என்று நாசாவின் வணிக விண்வெளி திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் தெரிவித்துள்ளார்.

ஜூன் 25ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆக்சியம்-4 பயணத்தை தொடங்கி 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஜூன் 26 ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலம் ISS-இல் இணைந்தது. சுபான்ஷு சுக்லா, மிஷன் தலைவர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் டிபோர் கபு ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். இவர்கள் 230 முறை பூமியைச் சுற்றி, சுமார் 100 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர்.
இந்தியாவின் 2 வது விண்வெளி வீரரும், ISS-ஐ அடைந்த முதல் இந்தியருமான சுபான்ஷு சுக்லா, 14 நாள் பயணத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வடிவமைத்த 7 மைக்ரோகிராவிட்டி ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள், தாவர உயிரியல், தசை ஆரோக்கியம் மற்றும் மைக்ரோபயாலஜி இவைகளை உள்ளடக்கியவை. மேலும், நாசா மற்றும் ISRO இணைந்து 5 அறிவியல் ஆய்வுகளையும், இரண்டு STEM ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.

குழு, ISS ல் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை முடித்து, உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களித்துள்ளது. ஜூலை 14ம் தேதி டிராகன் விண்கலம் ISS லிருந்து பிரிந்து பூமிக்கு திரும்பும், மேலும் குழுவினரை உற்சாகமாக வரவேற்க நாசா ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணம், இந்தியாவின் ககன்யான் மனித விண்வெளி திட்டத்திற்கு முக்கியமான அனுபவத்தை வழங்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
