”சுப்மன் கில்” ஆட்டத்திற்கு புகழாராம்!! வைரலாகும் சச்சினின் ட்வீட்!!
ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று முடிந்துள்ளன. நேற்று இறுதி போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை வந்து ஆட்டத்தை கெடுத்து விட்டது. இரவு 11 மணி வரை காத்திருந்த இரு அணிகளும் அதற்கு பிறகு மழை நிற்கிறபடியாக இல்லை. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று அகமாதாபாத்தில் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இரவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவும் மழை தொடர்ந்தால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த குஜராத்திற்கு சாம்பியன் கோப்பை அளிக்கப்படும்.
Shubman Gill's performance this season has been nothing short of unforgettable, marked by two centuries that left an indelible impact. One century ignited @mipaltan's hopes, while the other dealt them a crushing blow. Such is the unpredictable nature of cricket!
— Sachin Tendulkar (@sachin_rt) May 28, 2023
What truly… pic.twitter.com/R3VLWQxhoT
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மழை பெய்ய வேண்டாம் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். குஜராத் டைட்டன்சை பொறுத்தவரை வீரர் சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்துள்ளார். இந்நிலையில், அவரது ஆட்டத்தை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். அந்த பதிவில் “தனது அபார ஆட்டத்தின் மூலம் இந்த சீசன் மறக்க முடியாத சீசனாக மாற்றியுள்ளார் சுப்மன் கில். குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு சதம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நம்பிக்கை கொடுத்தது. மற்றொன்று மும்பைக்கு தோல்வியை கொடுத்தது. அது தான் கிரிக்கெட் விளையாட்டின் இயல்பு. அவரது குணம், அமைதி, ரன் குவிக்க வேண்டும் என்ற முனைப்பு, விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவது போன்ற அவரது கள செயல்பாடு என்னை கவர்ந்தது. மிக முக்கிய போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க சரியான தருணத்தில் அபாரமாக ஆட வேண்டும்.
அதை சுப்மன் கில், மும்பைக்கு எதிராக 12வது ஓவர் முதல் செய்திருந்தார். அது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும். அது போன்ற ஆட்டத்தை மும்பை வீரர் திலக் வர்மா ஆடி இருந்தார். சூர்யகுமார் யாதவ் அவுட் ஆகும் வரை மும்பைக்கு வெற்றிக்கான தருணம் இருந்தது. இதனால் குஜராத் அணி வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. கில், ஹர்திக், மில்லர் விக்கெட்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியம். அதே போல சென்னை அணியும் பலமான பேட்டிங் ஆர்டர் கொண்டுள்ளது. 8வது பேட்ஸ்மேனாக தோனி களம் இறங்குகிறார். இதனால் இந்த இறுதிப் போட்டி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். சச்சினின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!