சாலையில் திடீர் நீர்வீழ்ச்சி!! போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி!!
மழை பெய்தால் திடீரென சாலைகளில் பள்ளங்கள் ஏற்படும். ஆங்காங்கே குளங்கள் போல் தண்ணீர் தேங்கும். இதில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளே விழுந்து விடுவதும் உண்டு. ஆனால் தண்ணீர் குழாய் உடைந்ததில் பெரும் நீர்வீழ்ச்சி ஏற்பட்டது. அஸ்ஸாம் சாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று பிற்பகல் ராஜ்கர் பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலையில் திடீர் நீர்வீழ்ச்சி... அதிர்ச்சியில் உறைந்த மக்கள்#Assam #Guwahati #flood pic.twitter.com/clbjhOnK8x
— A1 (@Rukmang30340218) June 13, 2023
கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா பிரதான சாலையில் குழாய் உடைந்துள்ளது. தண்ணீர் குழாய் உடைந்ததில் தண்ணீர் பீய்ச்சியடித்து நீர்வீழ்ச்சி போல் காட்சியளித்தது. இது குறித்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தண்ணீர் அதிக அளவில் சாலையில் வீணாக செல்கிறது. அத்துடன் போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயமே. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்தனர். முதல்கட்டமாக அந்தப் பகுதியில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாம் அமைச்சர் இச்சம்பவம் குறித்து தமது ட்விட்டர் பதிவில் “ராஜ்கர் & கௌஹாத்தி காமர்ஸ் கல்லூரி இணைப்புச் சாலையில் நிலைமையை ஆய்வு செய்ய சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்தேன், அங்கு குடிநீர் குழாய் வெடித்ததால் அருகில் சிறிது சேதம் ஏற்பட்டது” என பதிவிட்டுள்ளார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!