கார் ரன்னிங்கில் திடீர் தீவிபத்து... அதிர்ச்சி வீடியோ...!!

 
தீவிபத்து

தர்மபுரி மாவட்டம் அரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு, சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் சேலத்தைச் சேர்ந்த யுவராஜ், ஹரிஸ் உள்பட 4 பேர் பயணம் செய்தனர்.


அப்போது கார் எச்.புதுப்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்ற போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை எழுந்தததாக தெரிகிறது. இதையறிந்த நான்கு பேரும், காரில் இருந்து கீழே இறங்கிய நிலையில், மளமளவென தீப்பற்றி கார் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

இது குறித்து அங்கிருந்தவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.இந்த கார் தீ விபத்து தொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web