சாலையில் மீண்டும் திடீர் பள்ளம்... ஸ்ரீரங்கத்தில் பொதுமக்கள் பீதி!

 
பள்ளம்

 தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ரோ பணிகள், சாலைகள் சீரமைப்பு, கேபிள் பதித்தல், பாதாள சாக்கடை பணிகள் என சாலைகளில் ஆங்காங்கே திடீர் பள்ளங்கள். வழக்கமாக மக்கள் பயன்படுத்தும் சாலைகள் முழுவதுமே குத்தி குதறப்பட்டுள்ளது. அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் கட்டுமானப் பணிகள், மின்சார பராமரிப்பு, டெலிபோன் கேபிள் பராமரிப்பு, செல்போன் டவர் பராமரிப்பு, பாதாள சாக்கடை, சிமெண்ட் தரைகள் அப்பப்பா மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பள்ளம்

சென்னையில் இதனால் ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் இத்துடன் வாழப் பழகி விட்டனர். அந்த வரிசையில் தற்போது திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில்  திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி மாற்றுப்பாதையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடையின் குழாய் வெடித்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 10ம் தேதி இதே பகுதியில் பாதாள சாக்கடையில் ஓட்டை விழுந்து, தற்காலிகமாக சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web