ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... மேலும் 2 பேர் கைது!

 
ஆம்ஸ்ட்ராங்

 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி  திருவேங்கடம் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.  
ஆம்ஸ்ட்ராங் பொற்கொடிஇந்த வழக்கில் பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். சம்போ செந்தில் தாய்லாந்து நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது அவர் இந்தியா வந்து வடமாநிலத்தில் பதுங்கி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மற்றும் ஒரு ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங்

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!