வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை... முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்த பயணிகள்!

 
வந்தே பாரத்

 சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்  செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது.   ஏ.சி. வசதிகளுடன் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் வழக்கம் போல், இன்று காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டது. காலை 8.25 மணிக்கு  வந்தே பாரத் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை நெருங்கியது.

வந்தே பாரத்

குறிப்பாக, வடமதுரை அருகே வந்து கொண்டிருந்தபோது, ரயில் பெட்டிக்குள் திடீரென புகை கிளம்பியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் முகத்தில் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு அருகில் உள்ள பெட்டிக்குள் ஓடிவிட்டனர்.   பெட்டியில் இருந்த கேட்டரிங் ஊழியர்கள் புகை மூட்டம் குறித்து என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள்  ஏசி காற்று வரும் இடத்தில் இருந்து புகை வந்ததை கண்டுபிடித்தனர்.  சற்று நேரத்தில், அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது.

வந்தே பாரத்

சுமார் ½ மணி நேர தாமதத்திற்கு பிறகு வந்தே பாரத் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதிர்ச்சியில் இருந்து மீண்ட பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டதுடன் அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.  வந்தே பாரத் ரயிலில் புகை வந்த சம்பவம் சிறிது நேரம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?