நாளை முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை!

 
விடுமுறை

 மக்களவைத் தேர்தல் மற்றும் பண்டிகை விடுமுறையை அடுத்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.   தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள்  நடைபெற்று முடிந்துள்ளன. பிளஸ் 2வுக்கு விடைத்தாள் திருத்தம் பணிகள் தொடங்கி நிறைவு பெற்றுள்ளன. பிளஸ் 1 மற்றும், 10ம் வகுப்புக்கு விடைத்தாள் மதிப்பீடு நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட படி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிகளில் வெளியாகும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்துள்ளன.

விடுமுறை

 ஏப்ரல் 8ம் தேதி வரை சில பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றன.   இதனையடுத்து ரம்ஜான், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு  ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி, மக்களவைத் தேர்தல் என தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இந்த விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுகள் இன்றுடன்  நிறைவடைகின்றன. இதையடுத்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன், 3 அல்லது 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.  அதேநேரம், தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web