சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது சுமோ மோதி கோர விபத்து... 14 பேர் படுகாயம்!

 
சுமோ

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது சுமோ மோதி விபத்திற்குள்ளானதில் தொழிலாளர்கள் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் காஞ்சிபுரத்தில் இருந்து தொழிற்சாலை ஊழியர்களை வேனில் ஏற்றிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி டிரைவர் சென்றுக் கொண்டிருந்தது.

விபத்து

அப்போது காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வளைவில் வேன் திரும்பிய போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து சென்னைக்கு அதிவேகமாக வந்த டாடா சுமோ மோதியதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த தொழிலாளர்கள் 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிவில் வழக்கு சம்பந்தமாக காரில் சென்ற 4 பேர் என 14 பேர் படுகாயமடைந்தனர். 

விபத்து

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார் காயமடைந்த 14 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web