சுப்மன் கில்லுடன் சாரா டெண்டுல்கர்!! மீண்டும் மலரும் காதல்!!
நாளை ஜூன் 7ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. ஓவல் மைதானத்தில் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 43 போட்டிகளிலும், வெளிநாட்டு அணிகள் 23 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தில் டாஸ் வென்ற அணிக்கான வெற்றி வாய்ப்பு 34.62%. முதலில் பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 35.58% . டெஸ்ட் போட்டியின் முதல் 3 நாட்கள் அதாவது நாளை ஜூன் 7, 8 மற்றும் 9 தேதிகளில் ஓவலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 4 மற்றும் 5வது நாள் பிற்பகலும் , மாலை நேரத்திலும் மழைப்பொழிவு இருக்கலாம் எனவும் தெரிகிறது. மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் 6வது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்படும். இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம். இந்திய அணி 1936 முதல் ஓவல் மைதானத்தில் இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் இந்தியா 2 வெற்றி, 5 தோல்வி மற்றும் 7 போட்டிகள் சமனில் முடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சுப்மன் கில் இங்கிலாந்து வந்துள்ளார். அதே நேரத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் இங்கிலாந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சுப்மன் கில் . இவர் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்தவர் . சுப்மன்கில் ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 208 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளிலும் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார். இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் சுப்மன் கில் , சாரா டெண்டுல்கருடன் டேட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!