தைவான் சர்வதேச மாநாடு.. 6 நாடுகளை பகிரங்கமாக எச்சரித்த சீனா!

 
தைவான்

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான், 1949ல் சுதந்திர நாடாக மாறியது. ஆனால், தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக கருதும் சீனா, மீண்டும் அதனுடன் சேர ஆர்வமாக உள்ளது. இதனால் தைவான் எல்லைக்கு சீனா போர்க்கப்பல்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தைவானுடன் வேறு எந்த நாடுகளும் உத்தியோகபூர்வ உறவுகளைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் சீனா எச்சரித்துள்ளது.

தைவான் - சீனா

இந்நிலையில் அடுத்த வாரம் தைவானில் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பொலிவியா, கொலம்பியா, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சீனா கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் தைவான் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என சீனா தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் அந்த நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வர்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!