முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

 
Stalin

 மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதிமாறன்  நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்திரகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை அடையாறு காந்திநகர் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இந்திரகுமாரி

முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணித் தலைவருமான புலவர் இந்திரகுமாரி உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 73.

கடந்த 1991 முதல் 1996 வரையிலான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக அவர் பணியாற்றியவர். 1991ம் ஆண்டு நாட்ராம்பள்ளியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திரகுமாரி

“கழக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி அவர்கள் மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி அவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு கழகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

புலவர் இந்திரகுமாரி அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!