ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம்... ஒரே அறையில் தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!
திருநெல்வேலி மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வை தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் எழுதிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் உமர் பாரூக். அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த கல்வி தொடர்பான சட்டத்தின் படி, தற்போது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இதன் படி தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணி தேடுபவர்கள் பி.எட். பயிலும் மாணவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் இன்று மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். இத்தேர்வில் ஆசிரியரான உமர் பாரூக், தற்போது ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும் அவர் தம் மகன் தானிஷ் ஆகிய இருவரும் தேர்வெழுதினர்.

இந்த ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில், இம்மாணவர் பத்தாம் வகுப்பு பயின்ற போது வகுப்பாசிரியராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியைத் தக்க வைக்க தந்தையும், ஆசிரியர் பணியைப் பெற மகனும் ஒரே நேரத்தில் தேர்வெழுதியது,"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் திருக்குறளை நினைவூட்டியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
