ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை .. தட்டி தூக்கிய காவல்துறை!!

 
kalla

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி நெல்லை மாநகர காவல்துறை சார்பாக அப்பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
 போக்சோ நீதிமன்றம்
அப்போது நிகழ்ச்சி முடிவில் தனியாக வந்த 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் அங்குள்ள காவல் உயர் அதிகாரியிடம் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் அடிக்கடி தொந்தரவு தருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

போக்சோ விழிப்புணர்வு கையேடு

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் ஜோசப் செல்வின் (59) புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் மாணவிகள் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது.இதையடுத்து ஆசிரியர் ஜோசப் செல்வின் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியரே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web