கண்ணீர் அஞ்சலி... ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்... இன்று மாலை 5 மணிக்கு ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்!

 
ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்குகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொத்தேரியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அரசு மரியாதை அளித்து குறித்து விண்ணப்பித்துள்ள நிலையில், அரசே இது குறித்து முடிவெடுக்க நீதிபதி பவானி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அவரது ஆதரவாளர்களும், நண்பர்களும் ஆம்ஸ்ட்ராங்கை உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஆம்ஸ்ட்ராங்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.போலீசார் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன் ஆற்காட்டில் சுரேஷ்  கொலைச் சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னால் இருந்து செயல்பட்டதாகவும், எனவே அவரது சகோதரர் கூலிப்படை ஏவி அவரைக் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 8 பேர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web