இளம்பெண்ணின் வாயில் வெடிமருந்தை வெடிக்க செய்து கொலை... கள்ளக்காதலன் வெறித்தனம்!
இளம்பெண்ணின் வாயில் வெடிமருந்தைத் திணித்து வெடிக்கச் செய்து கொலைச் செய்த கள்ளக்காதலனைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தில் வசித்து வருபவர் ரக்ஷிதா (20). இவருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதனிடையே திருமணத்திற்குப் பின்னரும், ரக்ஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான சித்தராஜு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவன் வேலைக்கு சென்ற நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ரக்ஷிதாவும் அவரது கள்ளக்காதலனான சித்தராஜுவும் நேற்று முன் தினம் ஹிர்யா கிராமத்தில் உள்ள லாட்ஜிக்கு சென்றிருந்தனர். லாட்ஜில் வைத்து ரக்ஷிதாவுக்கும் சித்தராஜுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சித்தராஜு தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை ரக்ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச் செய்தார். இதனையடுத்து ரக்ஷிதாவின் முகம் முழுவதும் வெடித்து சிதறி அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கள்ளக்காதலன் சித்தராஜு அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். அறையில் வெடிசத்தம் கேட்டு லாட்ஜ் ஊழியர்கள் விரைந்து சென்று தப்பியோட முயற்சித்த சித்தராஜுவை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், சித்தராஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். லாட்ஜ் அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
