தனது இறுதியஞ்சலி போஸ்டருக்கு புகைப்படத்தை செலக்ட் செய்து கொடுத்த இளம்பெண்... கதற வைக்கும் சம்பவம்!

 
தனது இறுதியஞ்சலி போஸ்டருக்கு புகைப்படத்தை செலக்ட் செய்து கொடுத்த இளம்பெண்... கதற வைக்கும் சம்பவம்!

இறக்கும் தேதி தெரிந்துவிட்டால் வாழ்க்கை அதன் பின்னர் நரகம் தான் என்பார்கள். ஆனால், உயிரிழக்கப் போவது தெரிந்த நிலையிலும், தன்னுடைய இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட வேண்டிய செய்திதாள் விளம்பரம், போஸ்டர், ப்ளெக்ஸ் பேனர்களில் வைக்கப்பட வேண்டிய வாசகங்கள், புகைப்படங்களை சந்தோஷமாக, குதூகலத்துடன் கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேர்வு செய்து கொடுத்திருக்கிற சம்பவம் கண்களைக் குளமாக்குகிறது. 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா. எலும்பு புற்றுநோயினால் தாக்கப்பட்ட சினேகா, இரண்டு எலும்புமஜ்ஜை மாற்று அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட போதும், நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை. இந்நிலையில், தனது இறப்பை அறிவிக்கும் ஃப்ளெக்ஸ் போர்டுக்கு புகைப்படங்களையும் தேர்வு செய்தாள் என்று உயிரிழந்த சினேகா அன்னா ஜோஸ் குறித்து அவரது பெரியம்மா உருக்கமான பதிவு ஒன்றை முகநூலில் பகிர்ந்துள்ளார். 

தனது இறுதியஞ்சலி போஸ்டருக்கு புகைப்படத்தை செலக்ட் செய்து கொடுத்த இளம்பெண்... கதற வைக்கும் சம்பவம்!

தனது சகோதரியின் மகள் சிநேகாவின் கடைசி ஆசை குறித்து அவர் எழுதியிருக்கும் முகநூல் குறிப்பு படிப்பவர்களின் நெஞ்சை பதறச் செய்கிறது. 

26 வயதான சினேகா அன்னா ஜோஸ் தனது மரணத்தை முன்னரே அறிந்திருந்தார். அவரது மரணச் செய்தியை அறிவிக்கும் செய்தித்தாள்கள் மற்றும் ஃப்ளெக்ஸ் போர்டுகளில் வெளியிட புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தார். புதிய ஆடைகள் மற்றும் கலசத்தை அலங்கரிக்கும் ரோஜாப் பூச்செண்டுகளுடன் தன்னை அடக்கம் செய்யுமாறு அவள் தனது பெற்றோரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். 

இரண்டு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்த போதிலும், சினேகா கொடிய நோயின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்தார். இது குறித்து சினேகாவின் பெரியம்மா தனது முகநூல் பதிவில், “அவளுடைய பெயர் குறிப்பிடுவது போல, அவள் அன்பாகவும், ஒழுக்கமாகவும், அடக்கமாகவும் வாழ்ந்தாள். அவள் 10ம் வகுப்பு வரை படிப்பில் மெதுவாக முன்னேறினாள். இருப்பினும் 11 மற்றும் 12ம் வகுப்பில் விஷயங்கள் தலைகீழாக மாறியது. அவள் அதிக மதிப்பெண்களைப் பெற்றதால், பெரிய கனவு காணத் தொடங்கினாள். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பொறியியலில் 90% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதித்தாள். 

தனது இறுதியஞ்சலி போஸ்டருக்கு புகைப்படத்தை செலக்ட் செய்து கொடுத்த இளம்பெண்... கதற வைக்கும் சம்பவம்!

நோய்க்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து கூகுள் செய்து பார்ப்பார். மேலும் அவர்களின் சொத்துக்களை விற்று சிகிச்சைக்காக கடன் வாங்குவது பற்றி அடிக்கடி தனது தந்தையிடம் விளையாட்டுத்தனமான முறையில் கேட்பார். 

இவ்வுலகில் அவளுக்கு இருந்த கொஞ்ச நேரமே தெரிந்தாலும், ஒவ்வொரு முறையும் ஒரு அழகான புன்னகை அவள் முகத்தை அலங்கரித்தது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சினேகா விரைவில் வேலைக்குச் சேர்ந்தார். அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நோய் மீண்டும் அவளைத் தாக்கிய போது குடும்பத்திற்குள் விஷயங்கள் மீண்டும் தலைகீழாக மாற துவங்கியது. எலும்பு மஜ்ஜை இரண்டாவது முறையாக மாற்றப்பட்டது மற்றும் சாத்தியமான அனைத்து சுகாதார சேவைகளும் வழங்கப்பட்டன. இருப்பினும், அவளை மீண்டும் உயிர்ப்பிக்க அது போதுமானதாக இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!