பட்டப்பகலில் இளம்பெண் சடலத்தை மூட்டை கட்டி வீசிய பயங்கரம்!
பட்ட பகலில் சாலை ஓரம் இளம்பெண் ஒருவரின் சடலத்தை மூட்டை கட்டி வீசி சென்ற இருவரால் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென இரண்டு பேர் மூட்டையைத் தூக்கி வந்த நிலையில், அவர்களின் மூட்டையில் என்ன உள்ளது? என கேட்டபோது. அழுகிய மாம்பழங்கள் இருப்பதாக கூறிவிட்டு, பைக்கை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து மூட்டையை வீசிச் சென்றவர்கள் தப்பிச் சென்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை அடுத்த ஆர்த்தி சவுக் பகுதியில் பைக்கில் வந்த இரண்டு பேர், மூட்டை ஒன்றை சாலையோரம் வீசி சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த பொதுமக்கள், மூட்டையில் என்ன உள்ளது? என கேட்டபோது.
அழுகிய மாம்பழங்கள் இருப்பதாக கூறிவிட்டு, பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். தொடர்ந்து பொதுமக்கள் மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இளைஞர்களை தேடிவருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
