மத நிகழ்ச்சியில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்.. கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் பரிதாப பலி!

 
உத்தர பிரதேச மத நிகழ்ச்சி

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் இன்று இந்து சமய சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் வெளியேறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பலர் மோதிக்கொண்டதில் கீழே விழுந்தனர்.நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் உள்பட 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் அடுத்தடுத்து இறந்தனர். இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.மேலும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web