கோர விபத்து... லாரி மீது சரக்கு வாகனம் மோதி 5 பெண்கள் உட்பட 3 பேர் பலி... 25 பேர் படுகாயம்.!

 
விபத்து

 சத்தீஷ்கார் மாநிலம் பிமிதரா மாவட்டம் பதரா கிராமத்தில் குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சரக்கு வாகனத்தில் சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கதையா என்ற பகுதி அருகே சென்றபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. 

விபத்து

இந்த கோர விபத்தில்  சரக்கு வாகனத்தில் பயணித்த 5 பெண்கள் உட்பட 8 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து  உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் வசித்தவர்கள் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web