நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதி 17 பேர் பலி!! 29 பேர் படுகாயம் !!

 
விபத்து

தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 45 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் கெய்ரோவுக்கு பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. பரபரப்பான அந்த நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன.

விபத்து

அந்த வகையில், அதிக பாரத்துடன் லாரி ஒன்று மெதுவான வேகத்தில் சென்றுககொண்டிருந்தது. அதே சாலையில் 45 பயணிகளுடன் சென்ற பேருந்து, ஓட்டுநரிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து தொடர்பான தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு சுமார் 26 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து

விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை.இங்கு விபத்துகள் பெரும்பாலும் வேகம், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எகிப்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web