பட்டப்பகலில் பயங்கரம்.. ஆட்டை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை.. பீதியில் மக்கள்!

 
சிறுத்தை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, மான் போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலையை விட்டு வெளியேறி மலையடிவார கிராமங்களில் கால்நடைகளை வேட்டையாடுவதும் பொதுமக்களை அச்சுறுத்துவதும் தொடர் கதையாக உள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனவன்குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் பகுதி உள்ளது.

சிறுத்தை

இப்பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாகவும், வீட்டில் கட்டியிருந்த ஆடு, மாடுகளை கடித்து குதறி மலையடிவாரத்துக்கு இழுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக புகார் கூறி வருகின்றனர். பின்னர் வனத்துறையினர் மோப்ப நாய் மூலம் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து இரண்டு இடங்களில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். மீண்டும் அதே இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. அதன்படி மேலும் இரண்டு சிறுத்தைகள் பிடிபட்டன. இதுவரை பிடிபட்ட 4 சிறுத்தைகளையும் வனத்துறையினர் பத்திரமாக மணிமுத்தாறு அருகே உள்ள மேல் கோட்டையாறு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். எனினும், அப்பகுதியில் உள்ள மலையில் 2 சிறுத்தைகள் விளையாடி வருவதாகவும், அச்சத்தில் உறைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணிமுத்தாறு 80 அடி கால்வாய் அருகே மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த சட்டநாதன் என்பவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். மாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கடித்து இழுத்து சென்றது. இதை பார்த்த மக்கள் அலறியடித்ததால் உடனடியாக சிறுத்தை ஆட்டை தனியாக விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. ஆடு அருகே சென்றபோது, ​​அதன் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆடு காயங்களுடன் உயிர் தப்பியது.

சிறுத்தைகள் இரவில் ஊருக்குள் புகுந்து ஆடுகளை அடித்து செல்வது மட்டுமில்லாமல் தற்போது பகலில் ஆடுகளை வேட்டையாடுவது  பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஊருக்குள் வரும் சிறுத்தைகளை கூண்டு வைத்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கடந்த மாதம் ஆணவங்குடியிருப்பு, வேம்பையாபுரம் மலையடிவாரத்தில் வனத்துறையினரால் நான்கு சிறுத்தைகள் கூண்டு வைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு சிறுத்தை பட்டப்பகலில் ஆட்டை கடித்து இழுத்து சென்றது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web