மிளகாய் பொடி தூவி ரூ.1.5 கோடி கொள்ளை.. நகை வியாபாரியிடம் முகமூடி கும்பல் கைவரிசை!

 
கண்ணாடி

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த். நகை வியாபாரியான இவர், நகை வாங்குவதற்காக நேற்று காலை கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார். நெல்லையில் இருந்து வந்தபோது அவரை பின்தொடர்ந்து இரண்டு கார்கள் வந்துள்ளது.

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, 2 கார்களில் முகமூடி அணிந்தபடி வந்த கும்பல் ஒன்று, சுஷாந்த் காரை வழி மறித்தது. அவரது காரை திறந்து  சுஷாந்த் மீது மிளகாய் பொடியை தூவியதோடு அவரை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் அனைவரும் சேர்ந்து கொள்ளையர்களை விரட்டியதாகவும் தெரிகிறது.

கண்ணாடி

இதனால் சுதாகரித்த கொள்ளை கும்பல் சுஷாந்த்தை காருடன் கடத்தி சென்றது. காரிலேயே சென்ற அந்த கும்பல் நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு முன்பாக நெடுங்குளம் பகுதியில் உள்ள குளக்கரையில் அவரை இறக்கவிட்டுவிட்டு, ரூ.1.50 கோடி பணத்தை திருடி சென்றதாக செல்லப்படுகிறது. இது தொடர்பாக சுஷாந்த் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

கண்ணாடி

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் பட்டப்பகலில் கொள்ளையை அரங்கேற்றிய கும்பலைப் பிடிக்க நாங்குநேரி டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கொள்ளை நடந்த பகுதிகளிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், காரின் பதிவெண் உள்ளிட்டவற்றை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web