நட்சத்திர ஓட்டலில் தாய்லாந்து அழகிகள் விபச்சாரம்... பெரும் பரபரப்பு !
குஜராத் மாநிலம் சூரத் நட்சத்திர ஓட்டலில் இயங்கி வந்த மிகப்பெரிய விபச்சார கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இங்கிருந்து , 13 தாய்லாந்து அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஜஹாங்கீர்புரா பகுதியில் உள்ள பார்க் பெவிலியன் என்ற நட்சத்திர ஓட்டலில் மிகப்பெரிய விபச்சார கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில், காவல்துறையினர் அந்த ஓட்டலில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 13 அழகிகள் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஓட்டல் மேலாளர் உட்பட 9 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
