‘காலம் உள்ளவரை கலைஞர் ' கண்காட்சியை நடிகர் பிரபு பார்வையிட்டார் !
![பிரபு](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/e08c83920a2454e2c869c3af92941380.jpeg)
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 'காலம் உள்ளவரை கலைஞர்' கண்காட்சியை நடிகர் பிரபு பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரின் வாழ்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ' திருவாரூரில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை' என நூற்றுக்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்களை பார்த்து ரசித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா உடன் இருந்தனர்.கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் பிரபு, கண்காட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது. இது தமிழ் மக்கள் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு கண்காட்சியாகும் என்றதுடன் கலைஞர் அவர்களின் திரை உலக வரலாற்றோடும் தமிழோடும் என் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது என்று தெரிவித்தார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!