நேற்றிரவே உஷாரான போலீசார்... தமிழகத்தின் பல மாவட்டங்களில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டில் சிறை வைப்பு!

 
பாஜக

இன்று தமிழக பாஜக மகளிரணியினர் மதுரையில் இருந்து சென்னை வரை நீதி கேட்பு பேரணி மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி விருதுநகர் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை போலீசார் அதிகாலை முதலே பேரணியில் கலந்துக் கொள்ள செல்ல முடியாதபடி வீட்டில் சிறை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையைக் கண்டித்து இன்று ஜனவரி 3ம் தேதி மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். 

பாஜக

இந்நிலையில் இன்றைய பேரணியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் நேற்றிரவு வேன் மூலம் மதுரைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். 

இந்நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் போலீசார் பாஜக மகளிர் அணி பொறுப்பாளர்களை வீட்டில் சிறை வைத்துள்ளனர். இதில் தூத்துக்குடி பெருமாள்புரத்தில் பாஜக மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர், முன்னாள் கவுன்சிலர் லதா இன்று காலை மகளிர் அணியினரை அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றிரவு போலீசார் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். வீட்டில் இருந்து அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வீட்டில் சிறை வைத்திருந்தனர். 

பாஜக

இது குறித்து மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் லதா கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம். 

பாஜக

இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் மகளிர் அணி நிர்வாகிகளை வீட்டில் சிறை வைத்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.அதே போன்று மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர். அவரும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக உமாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
அதில், “அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்! நீதி கேட்டு பேரணி செல்ல அனுமதி இல்லை மீறி செல்வோம் என்றவுடன் வீட்டுக் காவல். குற்றவாளிக்கு துணைபோகும் கேடு கெட்ட திமுக அரசு இன்று எங்கள் மகளிரணி நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்துள்ளது. வன்மையாக கண்டிக்கிறேன்!!” என பதிவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web