ஹாரன் அடித்ததால் வந்த விபரீதம்.. டிரைவர், கண்டக்டரை கொடூரமாக தாக்கி பணப்பை பறிப்பு!

 
கிருஷ்ணன்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே புலியூர் கொட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (47). இவர் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தர்மபுரியில் இருந்து புலியூர் வழியாக ஊத்தங்கரை நோக்கி பஸ்சை ஓட்டினார். புலியூர் நிறுத்தத்தில் பேருந்து நின்றது. பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ​​இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்பவர், பேருந்து முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்.

பயணிகள் பேருந்தில் ஏறியவுடன், இருசக்கர வாகனத்தை எடுக்குமாறு கூறி கிருஷ்ணன் ஹாரன் அடித்தார்.  ஏன் ஹாரன் அடிக்கிறீங்க? என ஓட்டுநர் கிருஷ்ணாவிடம் பிரதாப் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், பஸ்சில் இருந்து இறங்கிய கிருஷ்ணன், போலீசில் புகார் செய்வதாக கூறி, இருசக்கர வாகனத்தில் இருந்த சாவியை எடுத்தார். இதை தடுக்க முயன்ற பிரதாப் கண்டக்டர் ஆறுமுகத்தை கழுத்தை நெரித்தார். இதை கவனித்த கிருஷ்ணன் பிரதாப்பை கீழே தள்ளினார். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பஸ்சை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஊத்தங்கரையில் இருந்து புறப்பட்ட பேருந்து இரவு மீண்டும் மேட்டுக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது, ​​10க்கும் மேற்பட்டோர் பேருந்தில் ஏறினர். புலியூர் பேருந்து நிறுத்தம் வந்தபோது கண்டக்டர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கினர். கும்பலைச் சேர்ந்த ஒருவர், கையில் அணிந்திருந்த இரும்புக் காப்பால் , ஆறுமுகனின் கன்னத்தில் பலமாக அடித்ததால், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர், அவரை பஸ்சில் இருந்து இழுத்து கீழே தள்ளினர்.

மேலும், பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த 30 பேர் கொண்ட கும்பல், கண்டக்டரை தாக்கி, கையில் இருந்த பணப்பையை பறித்து, அதிலிருந்த ₹21 ஆயிரத்தை எடுத்து, பையை பஸ்சின் அடியில் வீசிவிட்டு சென்றது. அதே சமயம் டிரைவர் கிருஷ்ணாவை 2 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி உதைத்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்த போலீசாரை பார்த்ததும் பிரதாப் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

காயம் அடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web