பயங்கர வெடிகுண்டு.. சிதைந்த ராணுவ தளம்.. 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலி!

 
கம்போடியா

கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 20 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் உலக நாடுகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் கம்போங் பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் பயங்கர சத்ததுடன் அங்கு வெடிகுண்டு வெடித்தது.

வெடிகுண்டு வெடித்ததால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  மேலும், இதில் பலர் காயமடைந்தனர்.காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து கம்போடியா பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்த விபத்து குறித்து பிரதமர் ஹான் மானெட் தனது முகநூல் பதிவில் கூறியதாவது, வெடிவிபத்து பற்றிய செய்தியைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ளார். ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கும் என உறுதியளித்தார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web