காதலி கண்முன்னே காதலன் வெட்டிக்கொலை.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

 
தன்யா

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் பிரசாந்த் (21). இவர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தன்யா (20) என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் காதலித்து நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி தன்யா பிறந்தநாள் கொண்டாடினார்.

காதலியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்து கூற அவரது வீட்டிற்கு பிரசாந்த் சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார். தன்யா வீட்டுக்கு பிரசாந்த் சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தன்யா கண்முன்னே அவரது காதலனை உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இளைஞர் பிரசாந்தை தன்யாவின் உறவினரான விக்னேஷ் (29) என்பவர் வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தன்யா

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலன் தன் கண் முன்னால் கொலை செய்யப்பட்டதால் இளம்பெண் தன்யா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அதற்கு மறுநாள் இரவு தனது அறையில் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

தன்யா

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் தன்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பினார். இந்நிலையில் காதலி கண்முன்னே காதலன் வெட்டி கொலை செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த தன்யா நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

 

From around the web