தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்.. 2 ஆண்டுகளாக கொடூரம் !

 
பெண்

ராஜஸ்தானில் சுரூ மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் தமது பெற்றோருடன்  வசித்து வருகிறார். இந்த பெண்ணின் வீடு அருகேயே, அவரது பெரியப்பா குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தவகையில் இளம்பெண்ணின் அண்ணன் அதாவது பெரியப்பா மகன் வசித்து வருகிறார். 

சகோதரர் உறவு முறை என்பதால் பெண்ணின் வீட்டிற்கு அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது. அவர் எப்போதும் அந்த இளம்பெண்ணுடன் அதிகம் பேசுவது, விளையாடுவதுமாக இருந்துள்ளார். ஆனால், சகோதரன், சகோதரி என்பதால் யாரும் சந்தேகம் கொள்ளவில்லை.

பெண் பெண்

இதனை பயன்படுத்தி இளைஞர் பெரும் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2021 டிசம்பர் மாதம் வழக்கம்போல சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, இளம்பெண்தனிமையில் இருந்ததை தெரிந்து கொண்டு, மிரட்டி வலுக்கட்டாயமாக சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இந்த விஷயத்தை வெளியே கூறினால் வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவேன் என்ற மிரட்டிய இளைஞர், அதை வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளாக கொடூரம் தொடர்ந்த நிலையில், இளம்பெண்ணின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது.

பெண்

பெண்ணின் தாயார் அதை உணர்ந்து விசாரித்துள்ளார். அப்போது தான், சகோதரனால் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறிய நிலையில் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிந்து இளைஞர் கைது செய்யப்பட்டார்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web