50 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து !! 15 பேர் பலி!! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!
மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தூருக்கு சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, டோங்கர்கான் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50000, சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!