பாத்ரூமில் இருந்த செல்போன்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துவந்த வளர்ப்பு தந்தை கைது.. தாய் அதிர்ச்சி !!

 
சிறுமி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், பாவா பக்ருதீன் (39) என்பவரை இரண்டாவது திருமணம் செய்த நிலையில், சிறுமி, தம்பதி என மூவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். பாவா பக்ருதீன் மாற்றுத்திறனாளி ஆவார்.

இந்த நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது வளர்ப்பு தந்தையான பாவா பக்ருதீன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவர் மிரட்டியதால் சிறுமி வெளியே கூறவில்லை. இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு தெரியாமல் வீட்டின் குளியலறையில் செல்போன் கேமராவை பாவா பக்ருதீன் ஆன் செய்து வைத்துள்ளார். 

சிறுமி

ஆனால், சிறுமி குளித்து கொண்டிருந்தபோது பாத்ரூமில் செல்போன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தாயிடம் இதனை கூறி சிறுமி அழுதுள்ளார். மேலும் பாலியல் தொந்தரவு குறித்தும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது இரண்டாவது கணவன்மீது ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுமி

அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், பாவா பக்ருதீன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பக்ருதீனை போக்சோவில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web